Type Here to Get Search Results !

கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை... பொதுமக்கள் மகிழ்ச்சி


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதன் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்தது.

அதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் குறைய தொடங்கியது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் உயராமலேயே இருந்தது.

தொடர்ந்து 12ஆவது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 85.75ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 80.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.83 ரூபாய்க்கும், டீசல் 87.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் 90.62 ரூபாய்க்கும் டீசல் 83.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யபுடுகிறது.

தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.72 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom