Type Here to Get Search Results !

ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி


ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கேட்டரிங் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த  காட்டரம்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ்(40), காட்டரம்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன்(40), அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(42) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom