கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி அருகேயுள்ள பதரி பகுதியில் கிருஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பாதிரியாராக 54 வயதுடைய ரவிக்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 வயது இளம்பெண், தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் பாதிரியாருக்கும் - இளம்பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து தேவாலயத்தில் பிரார்த்தனை என்ற பெயரில், பெண்மணி பாதிரியாருடன் காதல் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி பிரார்த்தனை செய்ய தேவாலயம் செல்வதாக கூறிய இளம்பெண் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் பலன் இல்லாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்குள்ளாகவே பாதிரியார் ரவிக்குமார் மாயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் மற்றொரு புகார் வரவே, இரண்டையும் இணைத்து விசாரணை செய்கையில் பாதிரியாரும் - இளம்பெண்ணும் காதலித்து ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
பாதிரியாரும் - இளம்பெண்ணும் காதலித்து ஓட்டம் அருமையான பதிவு
பதிலளிநீக்குAthibAn Tv