கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 19 வது முறையாக துாத்துக்குடி ஆலங்கிணறு யாசகர் பூல்பாண்டியன் 70, ரூ.10 ஆயிரம் நிதியை மதுரையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் வழங்கினார்.
இதுவரை அவர் ரூ.1.90 லட்சம் வழங்கியுள்ளார். அவரது சமூக சேவையை பாராட்டி சுதந்திர தின விழா பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வினய் வழங்கினார்.
பூல்பாண்டியன் கூறுகையில், ''நான் நிதி வழங்குவது அறிந்து மதுரை மக்கள் எனக்கு தாராளமாக பிச்சை வழங்குகின்றனர். விரைவில் அடுத்த கட்ட நிதியையும் வழங்குவேன்,'' என்றார்.
AthibAn Tv