Type Here to Get Search Results !

ஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே! பாஜக, தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு



''ஆளுமை என்றால், அது பிரதமர் ஒருவர் மட்டுமே,'' என, பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா கூறினார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் 'ஷப்ரான் இந்தியா' அமைப்பினர் சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் வீடியோ வெளியீட்டு விழாவில், பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா பங்கேற்றார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் விவசாய சட்ட திருத்த மசோதா மூலம், விவசாயிகள், தங்களது விளை பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எங்கும் சென்றும் விற்பனை செய்து கொள்ளலாம். அதேநேரம் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தடை செய்யப்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் விவசாயிகளை திசை திருப்புகின்றனர்.

தமிழகத்தில் இருபெரும் ஆளுமை இல்லாமல் தேர்தல் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடி மட்டுமே ஆளுமையாக உள்ளார்.இன்னும், 70 நாளில், 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும். அதில், தொடர்புடைய, 2 எம்.பி.,க்கள் பதவியிழக்க உள்ளனர். அந்த தொகுதிகளில் இடைதேர்தல் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
விழாவில், மேகலாயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் இப்ராகிம், ஆர்.எஸ்.எஸ்., மண்டல தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom