ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்டப்படி நடவடிக்கை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 26ம் தேதியும் நடந்தது.
இதையடுத்து, அடுத்த கட்ட தேர்தல் வரும் 7, 13, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட 7ம் கட்ட தேர்தல் நடக்கிறது.ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். இருப்பினும், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள சிசாய் பகுதியில் இன்று பா.ஜ.க. பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மோடி அரசு அச்சுறுத்தல்களை துடைத்தழிக்கும். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.
இந்தியக் கூட்டணியின் தலைவர்கள் ஊழலில் கழுத்தளவு ஆழ்ந்துள்ளனர். டெல்லியிலும் ராஞ்சியிலும் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகப் பேசி அவர்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
பழங்குடியினர் மாவட்டங்கள் பின்தங்கியதற்கு காங்கிரஸ் தான் காரணம். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின குழந்தைகள் பட்டினியால் இறந்தபோது உணவு தானியங்கள் கிடங்குகளில் வீணடிக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவச ரேஷன் விநியோகத்தை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இது மோடியின் உத்தரவாதம்
அவர் கூறியது இதுதான்.
AthibAn Tv