ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர், சபாநாயகர் என அடுத்தடுத்து சந்தித்து பேசினர்.
ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தி வரும் நிலையில் இன்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்துபேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கவர்னருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் இன்று மூன்றாவது முறையாக கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை கவர்னர் மாளிகை சென்று சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையை கூட்டுவது தொடர்பாக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர், சபாநாயகர் என அடுத்தடுத்த சந்திப்புகளால் ராஜஸ்தான் அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது.
AthibAn Tv