விடுதலை சிறுத்தையின் தேச விரோத பேச்சு | 29-மே-2020
பாகிஸ்தானுக்கும், திருமாவளவனுக்கும் தொடர்பா ??? தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா ?
பாகிஸ்தான் உருவாக்கிய (போலி) ட்வீட்டை வைத்துக்கொண்டு இந்தியாவையும், இந்திய ராணுவத்தையும் கிண்டல் செய்த திருமாவளவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை பாயுமா?
இந்திய ராணுவத்தைப் பற்றி தவறான தகவலை பரப்புவதற்காக பாகிஸ்தானிய அந்நிய சக்திகள் சிலர் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து இந்திய ராணுவம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
பாரத தேசத்தை நேசிக்கும் அனைத்து இந்தியர்களும், திருமாவளவனின் ட்விட்டர் கணக்கில், அவருக்கு பதிலடி கொடுத்து அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். அவற்றில் இருந்து ஒன்று மட்டும் இதோ...
— மணி.R🙏🙏🙏 (@LMmk5C2I8H2drdg) May 28, 2020
இந்திய ராணுவம், சீன ராணுவத்தை வெளியே போகச் சொல்லும் பதாகையை கையில் பிடித்து இருப்பது போல, ஒரு போலி புகைப்படத்தை, சாகித் சித்திக் என்ற பாகிஸ்தானியன் ட்வீட் செய்திருந்தான்.
இதைப் பல பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானோடு மறைமுக தொடர்பில் இருக்கும் தேசவிரோத கட்சிகளின் உறுப்பினர்கள், தேசவிரோதிகள் இந்திய ராணுவத்தை இழிவு செய்யும் விதமாக சமூக வலை தளங்களில் பதிவு செய்யத் தொடங்கினர்.
திமுக தலைவர்கள் வேண்டுமென்றே தலித் சமூகத்தை இழிவு செய்யும் விதமாகப் பேசி வருவதை எதிர்க்க முடியாமல் "தோழமை சுட்டுதல்" செய்து வரும் திருமாவளவன் மீது தலித் சமூகம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு தேச பக்தர் நமக்கு பேட்டியளிக்கும் பொழுது, "எங்களது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,திமுக தலைமையை எதிர்த்து ஒரு அறிக்கை கூட கொடுக்காமல் இருந்து விட்டு, இப்பொழுது இவ்வாறு இந்தியாவை இழிவு படுத்தும் விதமாக பதிவிட்டு தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்", என்று கூறினார்.
இதனைப்பற்றி, மற்றொருவர் கூறும்பொழுது, "திமுகவின் பணபலத்தை பகைத்துக் கொள்ள முடியாமலும், தலித் சமூகத்தின் கோபத்தை சமாளிக்க முடியாமலும் திருமாவளவன் பெரும் குழப்பத்தில் உள்ளார். இதனால் தனது பேச்சுக்களிலும், செயல்களிலும் பெரிதும் கவனக்குறைவாகவே இருந்து வருகிறார், அவருக்கு மனநல சிகிச்சை செய்வது நல்லது" என்றார்.
அண்மையில் ஒரு பொய்யான செய்தியின் அடிப்படையில், இந்திய தேசத்தின் முதல் குடிமகனான ஜனாதிபதியை இழிவு செய்யும் வகையில் ஒரு ட்வீட் செய்திருந்தார்.
இப்போது அதே போல ஒரு போலி செய்தியின் அடிப்படையில் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தி ஒரு பதிவு செய்திருக்கிறார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு ஜனாதிபதியையும், இந்திய ராணுவத்தையும் கேலி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
திருமாவளவன் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம் என்று நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
AthibAn Tv