
கொரோனா சமூக பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த அளவு பாதித்த பகுதிகளில் நான்காம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பணக்கார நாடு தமிழ்நாடு மட்டுமே....! Tamil Nadu is the richest country ....!
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் துவங்கிய உள்நாட்டு விமான சேவையில் ஒரே நாளில் 53,318 பேர் பயணம் செய்ததாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் தன் டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்ததாவது, 'திங்கள் மே.25 மாலை வரை இயக்கப்பட்ட 532 விமானங்களில் 39,231 பயணிகள் பயணம் செய்தனர். பின் திங்கள் நள்ளிரவு வரை இயக்கப்பட்ட 832 விமானங்களில் மொத்தம் 58,318 பேர் பயணம் செய்துள்ளனர்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.