Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது: மத்திய சுகாதாரத் துறை



இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,594 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 51 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 20,010 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 7,027 பேர் குணமடைந்துள்ளனர், 937 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

மேலும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8,590 பேருக்கும், குஜராத்தில் 3,548 பேருக்கும், தில்லியில் 3,108 பேருக்கும், தமிழகத்தில் 2,058 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom