Type Here to Get Search Results !

தமிழகத்தில் இரட்டை இலக்க இலக்கத்தில் பா.ஜ.க வெற்றி பெறும்... மீண்டும் மத்தியில் வலுவான ஆட்சி... அண்ணாமலை

 மீண்டும் மத்தியில் நிலையான மற்றும் வலுவான ஆட்சியை அமைப்பதில் மக்கள் உறுதியாக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்கா மற்றும் பத்ராவதி பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் நேற்று காலை சிவமொக்காவில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “கடந்த 5 நாட்களாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன்.

நான் எங்கு சென்றாலும், மக்கள் மத்தியில் நிலையான, வலுவான அரசாங்கத்தை மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ளனர். இம்முறை தமிழகத்தில் மும்முனைப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இரட்டை இலக்க இலக்கத்தில் பா.ஜ.க வெற்றி பெறும்,'' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom