பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் சைஜூ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சைஜு கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து சைஜு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் பெண் மருத்துவர் அளித்த புகாரில் சைஜு கூறியிருந்தார்.
மேலும் சைஜு தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் மருத்துவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதை அடுத்து சைஜு போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் சைஜுவின் ஜாமீன் மனுவையும் கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், எர்ணாகுளம் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் ஸ்டேடியம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சைஜூவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
AthibAn Tv