Type Here to Get Search Results !

13 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்....

 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

2ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய பிரதேச மாநிலம் பிதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதிகளில் நேற்று மாலை பிரசாரம் நிறுத்தப்பட்ட நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்த செயல்முறைகள் முடிந்து வாக்குப்பதிவுக்கு தயாராக உள்ளன.

2ம் கட்ட வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடி. அவர்கள் வாக்களிக்க 1.67 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அந்தந்த மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom