ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட சென்ற போதே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஈஸ்டர் கொண்டாட்டங்களுக்காக தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா நகருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, மம்ட்லகலா என்ற இடத்தில் உள்ள பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 45 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் கொண்டாட்டங்களுக்காக போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் சர்ச்சின் தலைமையகமான மோரியாவிற்கு அவர்கள் யாத்திரை சென்றதாகத் தெரிகிறது.
இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் எரிந்து, உள்ளே இருந்த பலரின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்தன. பேருந்தின் அடியில் பல உடல்கள் சிக்கிக் கொண்டன. அவர்களின் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தரையில் மோதியவுடன் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனிடையே, விபத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கர்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாள் வார இறுதிக்கு தயாராகும் வேளையில் இந்த சோகம் வந்துள்ளது.
AthibAn Tv