Type Here to Get Search Results !

பங்குனி உத்திர திருவிழா தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் கொண்டாட்டம்….

பங்குனி உத்திர திருவிழா தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திர திருவிழா தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் கொண்டாடம்.... உத்திர திருவிழா தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கொண்டாட்டம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தங்கத்தேர் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா கோஷங்களுடன் தேர் இழுத்தனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அபிேஷக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom