கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் இருந்து தேர்தல் பறக்கும்படையினர் 1½ லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நல்லூர் சர்ச் அருகே, குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். இடுப்பில் 3 மூட்டை பணம் இருந்தது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
பணத்தை வாங்கி எண்ணி பார்த்தபோது, ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. தான் திருச்சி மாவட்டம் சத்திரியூரைச் சேர்ந்தவர் என்றும் பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பணம் கிடைத்ததாகவும் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, மாநகராட்சி உதவி கமிஷனர் தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்தனர். மேலும் குடிபோதையில் இருந்த பெண் ஆலங்காட்டில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
AthibAn Tv