Type Here to Get Search Results !

கரும்பு விவசாயி சின்னம் கொண்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல்

 கரும்பு விவசாயி சின்னம் கொண்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை கர்நாடகாவில் இருந்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களுக்கு அக்கட்சிக்கு ஒரே சின்னம் கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் உள்ள 17 தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது.

கரும்பு விவசாயி சின்னம் கொண்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தும், வேட்பாளர்கள் கிடைக்காததால் மற்ற தொகுதிகளில் போட்டியிடவில்லை என பாமஜக தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த முறை சீமான் கட்சி சார்பில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாமஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom