Type Here to Get Search Results !

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல். பரபரப்பு.....!



சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் இது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்ததில் அந்த நபர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது .

பிறகு விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரை குறித்து விசாரணை செய்ததில் அவர் முக்கிய நபர்களின் வீடுகளில் அடிக்கடி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. இதனால் பலமுறை கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர். அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom