Type Here to Get Search Results !

குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி....


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள ராஜ்பாத்தின் வடக்கு தெற்கு கட்டட வளாகங்களுக்கு நடுவே உள்ள பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், இன்று (ஜன.,29) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. முப்படை வீரர்களின் மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom