Type Here to Get Search Results !

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழக வருகை



‛நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 30ல் தமிழகம் வர உள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 26ம் தேதி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 30ம் தேதி தமிழகம் வருகிறது. டிச,1ம் தேதி முதல் ஆய்வு பணிகளை துவக்க உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. இதன் பின்னர், இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom