நடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகள் அனைத்தும் காய் நகர்த்த துவங்கி விட்டன. இந்நிலையில், தன் அரசியல் பிரவேசம் குறித்து, இறுதி முடிவை அறிவிக்காத ரஜினி, இன்று தன் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்காக, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, இன்று காலை, 9:00 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்கும் ரஜினி, அதன்பின், தன் அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து சென்ற நிலையில், ரஜினியின் இந்த ஆலோசனை அறிவிப்பு, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
AthibAn Tv