பாஜக தேசிய நிர்வாகிகள் குறித்த பட்டியலை இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார், இப்பட்டியலில் பாஜக தேசிய செயலாளராக இருந்து H.ராஜா பெயர் இடம்பெறவில்லை, இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் மற்றும் சில எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், H ராஜா தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்களை வெளியிட்டனர்.
இது குறித்து பாஜக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பாஜகவை பொறுத்தவரை கட்சி அல்லது ஆட்சி இரண்டில் ஏதாவது ஒரு பதவியில் ஒருவர்தான் இருக்க முடியும், அதே போன்று ஒருவர் தொடர்ந்து இரண்டுமுறை ஒரே பதவியில் வகிக்க இயலாது, அதன் அடிப்படையில் பல்வேறு மூத்த நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை, குறிப்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி, முரளிதரராவ் ஆகியோர் பெயர்கள் கட்சி பட்டியலில் இடம்பெறவில்லை.
புதிதாக பல இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில், H ராஜா பெயர் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெறாததை திமுக, திக, இன்னும் பிற இஸ்லாமிய இயக்கங்கள், கிண்டல் செய்திருந்தனர்,மேலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனம் செய்து பதிவுகள் பலவும் பகிரப்பட்டு வந்தன.
தற்போது டெல்லி பாஜக தரப்பில் இருந்து H.ராஜாவிற்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது, கட்சியின் பொறுப்பில் இடம்பெறாத மூத்த நிர்வாகிகளுக்கு, அமைச்சரவை, மாநிலங்களவை உறுப்பினர், மாநில ஆளுநர், வாரிய தலைவர் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகள் கொடுக்க இருப்பதாக தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது.
இதனால் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பதவி H.ராஜாவிற்கு கிடைக்கும் என்ற செய்தி உறுதியாகியுள்ளது, இந்த தகவல் H ராஜாவிற்கு நெருக்கமானவர்கள் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது, இதனால் எப்போது வேண்டுமானாலும் முக்கிய பதவிகளில் ஒன்று ராஜாவிற்கு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது கடுமையாக H.ராஜாவை சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்த எதிர்தரப்பினர் வாயை அடைந்துள்ளது, தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்தின், முதலமைச்சரை காட்டிலும் அதிகாரமிக்க பதவியான துணை நிலை ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
AthibAn Tv