திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் மனைவி வடிவு (29).
இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தை இல்லை.
வடிவு கர்ப்பமுற்றபோதிலும் கரு கலைந்து விடுவதால் அது குறித்து மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்
இந்த நிலையில், வடிவு மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் கணவ்ன் மனைவி மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடிவு, 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் கரு கலைந்துள்ளது.
அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாரியப்பன், வடிவு ஆகியோர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலையில் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் வந்து பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்தனர்.
அவர்களின் சடலம் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
AthibAn Tv