அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவேரல் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு நாசா நிறுவனம் விண்கலத்தை ஏவி உள்ளது.
இம்மாதம் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தி உள்ளது.
பிரிசெர்வென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்துடன், 6 சக்கர வாகனமும், சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்திற்கு அட்லாஸ் 5 என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை இது சென்றடையும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை 687 நாட்கள் வரை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வர உள்ளது.
AthibAn Tv