Type Here to Get Search Results !

“அன்று“ 1991ல் சொன்னதை “இன்று“ 2020ல் செய்த மோடி....



கடந்த 1991 ல் அயோத்தி சென்ற மோடி, மீண்டும் ராமர் கோயில் கட்டுமான பணியின் போது வருவேன் எனக்கூறியதை நிறைவேற்ற உள்ளார்.

கடந்த 1991 ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராமர் கோயில் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, அயோத்தியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி நிற்பது போன்று அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை ராமஜென்மபூமி பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்த மகேந்திர திரிபாதி என்பவர் எடுத்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 1991ம் ஆண்டு ஏப்., மாதம் முரளி மனோகர் ஜோஷியுடன், பிரதமர் மோடி வந்தார். அப்போது, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகைப்படம் எடுக்க நான் மட்டுமே இருந்தேன். வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படத்தை நான் தான் எடுத்தேன். அப்போது, முரளி மனோகர் நிருபர்களிடம் பேசும் போது, மோடியை குஜராத்தை சேர்ந்த பா.ஜ., தலைவர் என அறிமுகம் செய்தார்.

இதன் பின்னர், உள்ளூர் நிரூபர்கள் சிலர் மோடியிடம், அயோத்திக்கு மீண்டும் எப்போது வருவீர்கள் என கேட்டனர்.அதற்கு மோடி, ராமர் கோயில் கட்டப்படும் போது மீண்டும் வருவேன் என தெரிவித்தார். அதனை பிரதமர் தற்போது நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom