Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் 3ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது



தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3624 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். 8 பேர் வெளிநாட்டில் இருந்தும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.

இன்று மட்டும் 34,805 பரிசோதனைகள் நடந்தது. இதனுடன் சேர்த்து, இதுவரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 பரிசோதனைகள் நடந்தது. அதேபோல், இன்று மட்டும் 32 ஆயிரத்து 068 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால், பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 059 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 78,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 68 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,335ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,699ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு 1,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,025ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44,094ஆக உயர்வு

வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 89 பேருக்கு கொரோனா

சிங்கப்பூர், மலேசியா, கத்தார், சவுதி, மாலத்தீவிலிருந்து வந்த 8 பேருக்கு கொரோனா

கர்நாடகாவிலிருந்து வந்த 40 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

கேரளாவிலிருந்து வந்த 11 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

இன்று ஒரே நாளில் 34,805 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

செங்கல்பட்டு: 248 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

மதுரை மாவட்டம்: 218 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டம்: 146 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவண்ணாமலை: 127 பேருக்கு இன்று கொரோனா உறுதி

வேலூர் மாவட்டம்: 118 பேருக்கு இன்று கொரோனா உறுதி

இராமநாதபுரம்: 101 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: 98 பேருக்கு இன்று கொரோனா உறுதி

இராணிப்பேட்டை: 96 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டம்: 66 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom