தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்தில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் இருவருக்கும், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
AthibAn Tv