
இரண்டாம் உலகப்போரில் வெற்றி நெற்றதன் நினைவாக ரஷ்யாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர நடை போட்டனர்.
1945ல் முடிவடைந்த இரண்டாம் உலகப்போரில், ரஷ்யா வெற்றி பெற்றதை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி விழாவாக கொண்டாடி வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த ஆண்டு விழா நடக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், வெற்றிகரமாக விழாவை நடத்தி காட்டியுள்ளது ரஷ்யா.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவருடன் முப்படைகளை சேர்ந்த 75 வீரர்கள் பங்கேற்றனர். சமூக விலகல், முககவசம் அணிந்து தகுந்த பாதுகாப்புடன் விழா வெற்றிகரமாக நடந்தது.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பதிவிட்டதாவது: மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இன்று நடந்த ரஷ்ய வெற்றி தின பேரணியில் பங்கேற்றேன். இதில் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டது எனக்கு பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.