
ஊரடங்கால் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட உத்தரபிரதேசத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் பீஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு லட்சக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சென்றனர். சிறப்பு ரயில்களால் உ.பி.,க்கு திரும்பிய லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாயப்பு இன்றி தவிக்கின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நபர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க உ.பி மாநில அரசு சில நடவடிக்கைகளையும், திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தேசிய கட்டுமான வளர்ச்சி கவுன்சிலுடன் உ.பி.,அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, உ.பி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தவிர பல மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 26 ம் தேதி ஒரு கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதன் மூலமாக ஒரே நேரத்தில் ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறும். மற்றும் ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதன் மூலம் அதிக பலன் பெறுவார்கள்.
பிரதமர் மோடியும் வீடியோ கான்பரன்சிங் மூம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப உள்ளார் எனவும் கூறப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MNREGS) மாநிலத்தில் உருவாக்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேலான உத்தரவாதத்தை அளிக்கும். இது தொடர்பாக மத்திய வேலைவாய்ப்பு உத்திரவாத கவுன்சிலின்முன்னாள் உறுப்பினர் சஞ்சய் தீட்சித் கூறுகையில், உ.பி.,யில் சுமார் 1.80 கோடி (MNREGA ) வேலை கார்டுதாரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில் சுமார் 15 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கான கார்டுகள் சேர்க்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலனவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர்.
நதியை மீட்டெடுப்பதைத் தவிர, கிராமப்புற சாலைகள் அமைத்தல், தோட்டங்கள் மற்றும் தோட்டங்களில் குழிகள் தோண்டுதல் மற்றும் இதுபோன்ற பிற பணிகள் மற்றும் கிராமப்புற வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வேலை வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றன. MNREGS ன் கீழ் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நாங்கள் பல முக்கிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளோம். மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) துறை, பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கும் முகவர் நிறுவனங்களும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை வழங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.