Type Here to Get Search Results !

இந்தியாவில் இருந்து கட்டுமான பணிக்காக 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல்

 ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போர் காரணமாக, இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இதனால், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 6 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குறுகிய காலத்தில் கட்டுமானத் துறைக்காக ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வருகிறார்கள்.பிரதமரின் கூட்டு நிதியின் மூலம் வாடகை விமானம் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம். ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவிலிருந்து 6,000 க்கும் அதிகமானோர். தொழிலாளர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்," என்று அது கூறியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom