தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தங்களுக்குச் சாதகமாக அமைந்தால் காங்கிரஸ் மகிழ்ச்சியடையும் என்றார்.
இதனிடையே பாஜகவுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.