Type Here to Get Search Results !

'சீன கம்யூனிஸ்ட் கட்சி யுடன், காங்கிஸ் கட்சி ரகசிய கூட்டு“ சோனியாவும் - ராகுலுக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை

உன்னயெல்லாம் நம்பினால் வேலைக்கு ...

'சீன கம்யூனிஸ்ட் கட்சி யுடன், காங்கிஸ் கட்சி, 2008ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிஸ் தலைவர், சோனியா, எம்.பி., ராகுல் ஆகியோரிடம், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்' என கோரி, உச்ச நீதி
மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.மு., கூட்டணிவழக்கறிஞர் ஷஷாங் சேகர் ஜா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சீனாவுடன், இந்தியாவுக்கு எப்போதுமே சிறப்பான உறவு இருந்தது இல்லை.அப்படியிருந்தும், 2008ல், மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால், அதில் கூறப்பட்டுள்ள விபரங்களை, காங்கிரஸ் மறைத்து விட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

ஆனால், தேசிய முக்கியத்துவம் பெற்ற, இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை காங்கிரஸ் மறைத்து விட்டது.இரு நாடுகள் தொடர்பான விவகாரத்தில், இரு கட்சிகளும் இணைந்து செயல்படவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்ட விரோதம்அதனால், இந்த ஒப்பந்தம் பற்றி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், 1967ன் கீழ் விசாரிக்க, என்.ஐ.ஏ., வுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, காங்., தலைவர் சோனியா, எம்.பி., ராகுலிடமும், என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.