
இந்தியாவில் சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நகரம் சென்னை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த 'கே7' சைபர் பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம், 2020 ஜன., முதல் மார்ச் வரை சைபர் அச்சுறுத்தல் ஆய்வு ஒன்றை நடத்தில், இதில் இந்தியாவில் அதிக சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட நகரமாக, 42 சதவீதத்துடன் சென்னை முதலிடம் பிடித்தது.
அதற்கடுத்த இடத்தில், தலா 38 சதவீதத்துடன் பெங்களூரு, பாட்னா நகரங்கள் இடம்பிடித்தன. தலா 35 சதவீதத்துடன் கோல்கட்டா, ஐதராபாத் நகரங்கள் மூன்றாம் இடம் பிடித்தன. குறிப்பாக மைக்ரோசாப்ட் அப்டேட்டை நிறுத்திய 'விண்டோஸ் 7' மற்றும் 'விண்டோஸ் எக்ஸ்பி' ஓஎஸ் பயன்படுத்துவோர், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனிநபர்களை பொறுத்தவரை, மால்வேர் சாப்ட்வேர்களை பயன்படுத்துவோர், போலி ஆப்கள் மற்றும் கொரோனா தொடர்பான ஆப்களை பயன்படுத்துவோர் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். பாட்னா, புவனேஸ்வர் நகரங்களும் சைபர் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.