
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையளிக்கும் திறனை மேம்படுத்த ஏ.சி அல்லாத 5231 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்த ரயில்வே முடிவுசெய்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. தலைநகர் டில்லியிலும் (குறிப்பாக எல்லை மாவட்டங்களில்) கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரதுறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நோய் பாதிப்புகளை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து 5,231 ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது. அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநிலங்களில் உள்ள படுக்கை வசதிகள் நிறைந்த பின் இந்த ரயில்களில் நோயாளிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை துவங்கும்.
டில்லியில் கொரோனா அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி விட்டதால் பல நட்சத்திர ஓட்டல்களும் விடுதிகளும் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, ரயில்பெட்டிகளில் தனிமைப்படுத்த டில்லிக்கு ரயில்பெட்டிகளை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி, டில்லிக்கு ரயில்களை ரயில்வே துறை அனுப்பியது. இந்த ரயில்களில் காற்றோட்டமுடன் , இயற்கை வெளிச்சத்துடன் பயன்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கான ரயில்கள் என்பதால் ஏ.சி குறித்து நிதி நியாக் மற்றும் மத்திய சுகாதாரதுறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏ.சி காற்று குழாய்கள் மூலமாகவும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏ.சி பெட்டிகள் பொருத்தமாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது. மிதமான, அதிக மிதமான மற்றும் நோய் தொற்று அறிகுறிகள் கொண்ட சந்தேசிக்கப்படும் நோயாளிகள் தனிமைப்படுத்த இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படும். அரசு விதிமுறைகளின்படி, ரயில் நிற்கும் பிளாட்பாரத்தின் அருகில் அவசரசிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும். பொருட்களை மாற்றம் செய்வதற்கான அறைவசதி களும் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.