Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,468



தமிழகத்தில் இன்று (ஜூன் 24) ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆகவும், பலி எண்ணிக்கை 866 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 91 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 67,468 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,079 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,76,431 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று 25 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் என மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.