Type Here to Get Search Results !

கொரோனா பாதிப்புக்கு உள்ளான, 191 கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது ...

சென்னையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான, 191 கர்ப்பிணியர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில், 70 பேர்; எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில், 68 பேர்; திருவல்லிக்கேணி கஸ்துாரிபா காந்தி மருத்துவமனையில், 29 பேர்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 24 பேர் என, 191 கர்ப்பிணியர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, கர்ப்பிணியர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியர், 600க்கும் மேற்பட்டோர் பிரசவித்துள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.