Type Here to Get Search Results !

இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் 14,516 பேருக்கு கொரோனா உறுதி



இந்தியாவில் நேற்று(ஜூன் 17 காலை : 9.30 மணி) ஒரே நாளில் 14,516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,948 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 048 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,24,331 - 5,893

தமிழகம்- 54,449 - 666

டில்லி -53,116-2,035

குஜராத்-26,141-1,618

உ.பி.,-15,785-488

ராஜஸ்தான்-14,156-333

மேற்கு வங்கம்- 13,090-529

ம.பி.,-11,582-495

ஹரியானா-9,743-144

கர்நாடகா-8,281- 124

ஆந்திரா 7,961-96

பீஹார்-7,18150

தெலுங்கானா-6,526-198

காஷ்மீர்-5,680-75

அசாம்-4,904-09

ஒடிசா-4,677-11

பஞ்சாப் 3,832-92

கேரளா-2,912-21

உத்தர்காண்ட்-2,177-26

சத்தீஸ்கர்-2,028-10

ஜார்க்கண்ட்-1-965-11

திரிபுரா-1,178-01

லடாக்744-01

கோவா-725-0

மணிப்பூர்-681-0

ஹிமாச்சல பிரதேசம்-61908

சண்டிகர்-381-06

புதுச்சேரி-286-07

நாகலாந்து-198-0

மிசோரம்-130-0

அருணாச்சல பிரதேசம்-103-0