
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம்., என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறித்த முதல்வர் இ.பி.எஸ்., மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம்., என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறித்த முதல்வர் இ.பி.எஸ்., மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 24 மாலை, முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று( மே 25) காலை மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தொலைபேசி மூலம் ஓ.பி.எஸ்., ஐ தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். அப்போது, ஓ.பி.எஸ்., பூரண நலமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.