180 பேருடன் அந்தமான் புறப்பட்ட விமானம் சென்னை திரும்பியது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து 180 பயணிகளுடன் அந்தமான் செல்லும் விமானம் வழக்கத்தை விட சற்று தாமதமாக புறப்பட்டதாக தெரிகிறது. அந்தமான் வான்வெளியை நெருங்கி வரும் நிலையில் அந்தமானில் பலத்த காற்றுடன் கடுமையான வானிலை நிலவியது.
இதனால், விமானம் அங்கு தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் காற்றில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் வானிலை சீரடையாததால் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் சென்னை திரும்ப அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் நேற்று இரவு 7 மணியளவில் 180 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு திரும்பி தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
மோசமான வானிலை காரணமாக அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. அதனால் விமானம் ரத்து செய்யப்படுகிறது. நாளை (அதாவது இன்று) விமானம் மீண்டும் அந்தமான் செல்லும். அதே விமான டிக்கெட்டுகளில் நாளை அல்லது அவர்கள் விரும்பும் வேறு எந்த நாளிலும் பயணிகள் அந்தமான் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல பயணிகள் அதை ஏற்கவில்லை, சரியான நேரத்தில் சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டால் அந்தமானில் தரையிறங்கியிருக்கும். ஆனால் அந்தமானில் மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும், தரையிறங்க முடியாமல் போனதாகவும் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். வேறு வழியின்றி பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றினர்.
AthibAn Tv