Type Here to Get Search Results !

பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ அதிர்ச்சி பதில்


மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை நடைபெறும் அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் 2021 வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம்.

தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப்பாஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளது.  வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்றதிலும் எதிரொலிக்கும் என்ற


ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பார்ப்பது தவறு. 1980ல் நாடாளுமன்றத்தில் அதிமுக 2 இடங்கள் மட்டுமே பிடித்தது, ஆனால் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியை பிடித்தது. அதேபோல் இந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது குறித்த கேள்விக்கு.
பாரதிய ஜனதாவை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால் மாநில கட்சிகளோடு அகில இந்திய கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்திய கட்சி அறிவிக்கும் என்றார்.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, அழகிரி செயல்பாடு மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். அழகிரி தான் எடுக்கும் கொள்கையிலிருந்து மாறாத நிலைப்பாடு உடையவர் .முறையாக திட்டங்களை வகுத்து செயல்படுபவர் அண்ணன் அழகிரி . கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளது . ஆனால் திமுக அழகிரியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எதிர்க்கட்சிகளை வளரவிட கூடாது என்பதில் கலைஞரை போன்று செயல்படுபவர் அழகிரி

எதிர்க்கட்சியாக இருந்தபோது அழகிரியால் நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம் . அழகிரியிடம் ரவுடிகளாக இருந்தவர்கள் எல்லாரும் திமுகவிற்கு சென்றுள்ளார் . திமுக ஆட்சியின்போது கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஆனால் நீதிமன்றம் என்னை விடுவித்தது. ஆனால் நான் மிரட்டப்படவில்லை. அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று அழகிரி கட்சி துவங்கினால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும், என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom