கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் பரவியுள்ளகொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து , மாநில அரசுகளும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் கொரோனாவால் கடுமையாக பாதிப்பிற்குள்ளான மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று (நவ.24) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இம்மாநிலங்களில் மீண்டும் கொரோனா அலை தாக்காமல் தடுப்பது முன்னெரிக்கை நடவடிக்கைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
AthibAn Tv