Type Here to Get Search Results !

அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் காலமானார்.



தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சனிக்கிழமை இரவு 11.15 காலமானார் .அவருக்கு வயது 72.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த கடந்த 13 ம் தேதி சென்னையிலிருந்து போகும்பொழுது அவருக்கு திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதனால் துரைக்கண்ணுக்கு முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு அவர் சென்னை கொண்டுவரப்பட்டார்.

இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் காலமானார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom