Type Here to Get Search Results !

ஊடகவியலாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

coronaஊடகவியலாளர்கள் பணியில் ஈடுபடும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் இந்தியா முழுவதும் பத்திரிக்கையாளர்கள் 70க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மும்பையில் 53 பேருக்கு, சென்னையில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த மாநிலங்களில் ஊடகவியலாளர்களுக்கு கரோனா சிறப்பு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும்பொருட்டு வெளியே செல்கின்றனர். நிருபர்கள் கேமராமேன் புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் வெளியில் பணிக்குச் செல்லும்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தில் பணியாற்றும் அலுவல ஊழியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிறுவனமும் இதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom