கடந்த 10 மாதங்களை விட மே மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

மே மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.96 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தன.
இதனால் இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா வழங்கி வருகிறது. இதனால் சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது 11.4 சதவீதம் குறைந்துள்ளது.