Type Here to Get Search Results !

பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

 இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாட்டு மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 234 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது X தள பக்கத்தில், "இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் இணைந்து செயல்படுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நேபாள பிரதமர், மொரீஷியஸ் பிரதமர், இலங்கை அதிபர் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.