நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 241 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதேபோல் காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 35 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும், தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 294 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அந்த இலக்கை தாண்டி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
எனவே பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பது உறுதி. இதை உறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி., மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நட்டா இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இண்டி கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.