Type Here to Get Search Results !

கன்யாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று 3வது நாள் தியானம்...

 தியானம் முடிந்ததும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த தனிப் படகில் செல்கிறார். பிரதமர் மோடி கன்யாகுமரியில் சூரிய பூஜை செய்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இன்று 3வது நாள் தியானம்.

பிரதமர் மோடி கன்யாகுமரியில் சூரிய பூஜை செய்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இன்று 3வது நாள் தியானம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை நேற்று முன்தினம் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கன்யாகுமரி வந்தார். மாலையில் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தைத் தொடங்கிய அவர், காலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்தில் இருந்தார். தியானத்தின் போது அவர் காவி வேஷ்டி, காவி சட்டை மற்றும் காவி துண்டு என மாறினார். அவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் சந்தனம் மற்றும் குங்குமம் அணிந்துள்ளார். கையில் ருத்ராட்ச மாலையுடன் தியானம் செய்து வேத மந்திரங்களை உச்சரித்து கண்களை மூடினார். ஓம் என்ற சத்தம் கூடத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

பிரதமர் மோடி நேற்று காலை 5.30 மணிக்கு தியானம் முடித்து வெளியே வந்தார். 5.55க்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தைக் கண்டார். பிறகு சூரியனை வணங்கிவிட்டு மீண்டும் மண்டபத்திற்குள் வலம் வந்தார். அப்போது ஸ்ரீ பாதம் மண்டபம் மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.

அதன்பின், காலை 7.25 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று 2வது நாள் தியானத்தை தொடர்ந்தார். பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தபோதும், சுற்றுலாப் பயணிகள் படகில் செல்ல கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி இருந்த தியான மண்டபத்திற்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அங்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், கமாண்டோக்கள், தமிழக போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்யாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இன்று (சனிக்கிழமை) 3வது நாளாக பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். மதியம் தியானம் முடிந்ததும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த தனிப் படகில் செல்கிறார். அதன் பிறகு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதையொட்டி கடல், கடற்கரை, வான்வெளியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர், கமாண்டோக்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழ்நாடு கடலோர காவல்படை, தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.