Type Here to Get Search Results !

ஜிஎஸ்டி தாக்கல் தாமதமானால் அபராதம் வசூலிக்கப்படாது நிர்மலா சீதாராமன்

Finance minister Nirmala Sitharaman press conference today live ...

ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 40வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது. மாநில நிதியமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் கணக்கு தாக்கலின் போது தாமதமானாலும் அபராதம் இருக்காது. கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.