Type Here to Get Search Results !

இந்திய தூதரகத்தில் 50 சதவீதம் அளவிற்கு குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

Coronavirus outbreak: Indian embassy in Beijing cancels R- Day event

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அடுத்த ஒரு வாரத்திற்குள் 50 சதவீதம் அளவிற்கு குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாிகள் உளவுபார்த்ததாக கூறி நாட்டைவிட்டு வெளியேறும் படி இந்தியா தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரிகளை கடத்தி சித்ரவதை செய்தது. தொடர்ந்து இந்தியாவின் கட்டளையால் பாக். , இந்திய தூதரக அதிகாரிகளை விடுவித்தது.

இதனிடையே இந்திய அரசு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை அடுத்த ஒருவாரத்திற்குள் பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளது. அதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஊழியர்களையும் 50 சதவீதம் அளவிற்கு குறைத்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.