Type Here to Get Search Results !

முக கவசத்தால் கொரோனா தொற்று பரவல் 40 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Coronavirus in India: 2 more positive cases in Gujarat take total ...

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதால், கொரோனா தொற்று பரவல் 40 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதம் பொது இடங்கள் மற்றும் கடைகளுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்தனர். இதில், அடுத்த 20 நாள்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கால்வாசியாக குறைந்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் 40 சதவீதமாக குறைந்துள்ளது. முகக்கவசம் அணிவது கொரோனா பாதிப்பை குறைத்துள்ளதற்கு, வலுவான மற்றும் உறுதியான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோகன்னஸ் குட்டன்பெர்க் பல்கலைக்கழகம் மெயின்ஸ் மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகம் இணைந்து மத்திய ஜெர்மனி நகரமான ஜெனாவில் ஆய்வு மேற்கொண்டன. ஒரு லட்சம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட இந்த ஜெர்மனி நகரம் தான் ஏப்.,6ல், கடைகள், பஸ் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிவதை முதலில் கட்டாயமாக்கியது. முதல் 10 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 சதவீதமும், அடுத்த 20 நாட்களில் 23 சதவீதமும் குறைந்துள்ளது.

அடுத்த 2 மாதங்களுக்கு பின் கொரோனா தொற்று பாதிப்பு 60 சதவீதம் குறைந்தது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதில் 20 சதவீதம் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் குறைந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 'தி ஸ்டடி' இதழில் வெளியான கட்டுரையில், கொரோனா தொற்று பரவலை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைப்பது முகக்கவசம் அணிவதால் ஏற்பட்ட விளைவுகள் என்று நாங்கள் நம்புகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்க வேண்டுமென்பதற்கு இது இன்னும் மிக முக்கியமான சான்றாகும். முகத்தை மறைப்பதால் நன்மையை விட அதிக தீங்கு விளைவிப்பதாக இங்கிலாந்து அரசு கவலைப்படுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு பிறகு, பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவதை அமைச்சர்கள் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ள கடைகளுக்கு இதனை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.